திங்கள், 21 டிசம்பர், 2009

ஆஸ்கார் அவார்டை தட்டிச்செல்லும் வேட்டைக்காரன்!

ஆஸ்கார் அவார்டை தட்டிச்செல்லும் வேட்டைக்காரன்!
உலகத்தரமான படங்களை மட்டுமே தயாரித்துக்கொண்டிருக்கும் சன் தொ(ல்)லைக்காட்சி, குணச்சித்திரமான வேடங்களில் மட்டுமே நடிக்கும் உலக நாயகன் (மன்னிக்கவும்: அதற்குதான் கமல் இருக்கிறாரே!) மன்னிக்கவும் அண்டசராசரங்களின் நாயகன் விஜய் இவர்களின் கூட்டுமுயற்சியில் உருவான ஆஸ்கார் அவார்டு வாங்கவேண்டும் என்ற ஒரே முயற்சியில் தயாரிக்கப்பட்ட வேட்டைக்காரன் திரையரங்குகளை கலக்கிவருகிறான்....இது சூரிய தொ(ல்)லைக்காட்சியின் அதிரடியான ஒரு புருடா!

இதற்கு சிகரம் வைத்த மாதிரி சூரிய தொ(ல்)லைக்காட்சியின் இன்றைய (21-12-2009 7:00 இரவு) முக்கிய செய்தியில் நாம் கேட்டறிந்தவை...
"வேட்டைக்காரன் கதாநாயகன் விஜய்யும், அவரது தந்தையும் சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறனை அவரது இல்லத்தில் சந்திதித்து, வெற்றிநாயகனாக்கியதற்கு நன்றி சொன்னார்கள்".
சன் தொலைக்காட்சியில் விஜய்யின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அப்பொழுது அவரது தலைமுடி குழம்பியிருந்ததது. (ஒரு டப்பாபடத்தை எப்படி வெற்றிபடமாக்கினார்கள் என்பதே விஜய்யின் குழப்பத்திற்கு காரணமோ?. வேட்டைக்காரன் எப்பொழுது வெற்றிப்படம் ஆனது என்பதுதான் எங்களின் குழப்பம்.)

முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான் செய்தியை முந்தி தந்ததற்காக உலகத்தமிழர் சார்பாக கலாநிதிமாறனுக்கு எம் நன்றி.
இரண்டாவதாக, இன்றைய உலகத்திற்கு மிகவும் தேவையான முக்கியமான கருத்துக்களை மையமாகக்கொண்ட வேட்டைக்காரன் போன்ற திரைப்படத்தை தயாரித்ததற்காகவும் உலத்தமிழர் சார்பாக மறுபடியும் தலைவணங்கி நன்றி சொல்லுகிறோம். உங்கள் பணி தொடரவேண்டும் என வாழ்த்துகிறோம்.

விஜய்யால் மட்டுமே நடிக்கமுடியும் என்பதை மறுபடியும் விஜய் நிரூபித்துவிட்டார். சூர்யா, விக்ரம், கமல் வேறுயாராலும் முடியாது. (எப்படி அய்யா முடியும்? விஜய்தானே அய்யா, இந்த படத்தில் நடிப்பதற்காக முழுத்தொகையும் வாங்கியிருக்கார். பிறகு எப்படி மற்றவர்களால் நடிக்க முடியும்????)

இன்னும் நிறைய சந்தேகங்கள்!!!

ஆஸ்கார் அவார்டு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!!!

டொமினிக் சவுதி

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வேட்டைக்காரானும் வேலைவெட்டியில்லாத ரசிகர்களும்!!


நடிப்பு: விஜய்,அனுஷ்கா, சலீம் கவுஸ், ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே
ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பாபு சிவன்
தயாரிப்பு: ஏவிஎம்

அதோவாரான், இதோவாரான்னு பூச்சிகாட்டிய வேட்டைக்காரன்.....
....அப்பாடா! ஒருவழியாக வந்துவிட்டான்.
சன் தொ(ல்)லைக்காட்சி குழுமத்தில் வேலை பார்ப்பவர்களும், வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேட்டைக்காரனுக்கு வாய்கிழிய விளம்பரம் செய்து சமுதாயத்தொண்டாற்றிவிட்டார்கள். அதன் உச்சககட்டமாக சன் தொ(ல்)லைக்காட்சிகளின் முக்கியசெய்திகளில் ஒன்றாக வேட்டைக்காரன் அலசப்பட்டான். காஞ்சி காமக்குரு தேவநாதனின் செய்திகள்ளுக்குப்பிறகு, பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்தது வேட்டைக்காரனுக்குதான் என்றால் மிகையாகாது.

சோகம் என்னவென்றால் ஒருபாட்டு கூட கேட்கும்படியாக இல்லை!!


இந்த பிரமாண்டமான திரைப்படத்தைப்பற்றிய தாட்ஸ்டமில்.காம் விமர்சனம் இதோ!

மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.

வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.

அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார்.

விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.

நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.

படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!

நன்றி: தாட்ஸ்டமில்.காம்

எனது வேண்டுகோள் என்னவென்றால் ....விஜய் நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானியும் அல்ல. தில் தில் மனதில் இடம்பிடித்து சாகசங்களைச்செய்யவல்ல அசாதாரணமானவரும் அல்ல. ஸ்டண்ட் மாஸ்டர்களின் தியாகத்தாலும், கிராபிக்ஸின் கருணையாலும் படங்களில் வந்து செல்கிறார். அதனால் நேரத்தையும் காசையும் விரையம் செய்து முதல் வரிசையில் நின்று விஜய் படத்தைப்பார்க்கவேண்டும் என்ற தலையெழுத்து நமக்கு தேவையில்லாதது.

dompower

திங்கள், 23 நவம்பர், 2009

அஜ்மல் கசாப்பும் கசாப்புக்கடையும்!


டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா உள்ளிட்டோர் இன்று சோனியா காந்தியை சந்தித்து கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது உயிரை துச்சமென மதித்து தீவிரவாதிகளுடன் சண்டை போடுவதற்காக விரைந்த ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகள் அநியாயமாக தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானார்கள்.

இந்த துயரச் சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் ஒரு வருடமாகப் போகிறது. இந்த நிலையில், கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கரின் மனைவி ஸ்மிதா சலேஸ்கர் ஆகியோர் இன்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.

தங்களது கணவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் சோனியாவிடம் முறையிட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கவிதா கர்கரே பேசுகையில், நாங்கள் அவரிடமிருந்து சில உறுதிமொழிகளைப் பெற்றுள்ளோம். எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். சந்திப்பு முழுவதும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளின் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவருடன் விவாதித்தோம்.

நாங்கள் அவரிடம் பேசிய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. எங்களுக்கு பெரிய அளவில் எந்த வருத்தமும், புகாரும் இல்லை என்றார்.

இருப்பினும் இந்த சந்திப்பின்போது சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தண்டிக்காமல் வைத்திருப்பது குறித்து கவிதாவும், ஸ்மிதாவும், சோனியாவிடம் அதிருப்தியைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் இருவரும் கோபத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, தரக்குறைவான புல்லட் புரூப் உடைகள்தான் தங்களது கணவர்களின் உயிரைப் பறித்ததாகவும் அவர்கள் வேதனைப்பட்டுக் கூறியதாகவும் தெரிகிறது.

இது இன்றைய செய்தி:
எனது நெஞ்சம் என்ன சொல்லுதுன்னா.................


கசாப்பைத்தூக்கில்லிடாமல் இழுத்தடிப்பதற்கு, சில அரசியல் பாதுகாப்பு கொள்கைகள் காரணமாக இருக்கலாம். ஒருவேளை, இருக்கிற ஒரே ஒரு ஆதாரத்தையும் இந்தியா இழக்க விரும்பவில்லையோ? சமீபத்தில் நான் HBO தயாரித்த 'Terror In Mumbai' பார்க்கநேரிட்டது. அந்த படத்தைபார்க்கிற எவரும் கசாப் போன்ற தீவிரவாதிகளை உடனே துண்டு துண்டாக வெட்டணும் என்றுதான் சொல்லுவார்கள். இதே சம்பவம் சவுதியில் நடந்திருந்தால், bulletproof பேரத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளையும் சேர்த்தே அப்பொழுதே தூக்கிலிட்டிருப்பார்கள்.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

சூரியன் தேடிய வேட்டைக்காரன்!

நேற்று (22 -11-2009 sunday) சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த பொழுது, தற்செயலாக சூரியன் தொலைக்காட்சியை பார்க்கவேண்டியதாகிவிட்டது. AVM மின், விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்திற்கான இசை வெளியீடுதான் அந்த நிகழ்ச்சி. இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்களே என்று பார்த்தால், அதற்கு காரணம்... இது ஒரு சூரியன் தயாரிப்பு. பல சமகாலத்து திரைப்பட ஜாம்பவான்கள் நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த்தார்கள். உண்மையிலேயே விஜய் என்னதான் சாதித்துவிட்டால் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன். திரையில் தோன்றிய ஆரம்ப நாட்களில் இருந்து இன்றுவரை நிறைய மசாலா படங்களை தந்திருக்கிறார். இதுதான் அவர் தமிழ் மக்களுக்காக செய்த பெரும் சேவை. திரைப்படங்களில் சம்பாதித்த ஏராளமான வருமானத்தில் பெரும் சொத்து சேர்த்திருக்கிறார். இப்போது அரசியலிலும் நுழையவேண்டும் என்று ஒரு நப்பாசை. அவரது ஆசை நிறைவேற வேட்டைக்காரன் துணையாக இருப்பானாக!

சனி, 21 நவம்பர், 2009

ஆதவனைப்பார்க்கப்போனது என் போதாதகாலம்!

தற்போதைய தமிழ் படம் பார்ப்பவர்களை நினைத்து நான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
உலகமே முன்னுக்கு போய்கொண்டிருக்கும்பொழுது, நாம் மட்டும் நடிகர் நடிகையரை பணக்காரர்கள் ஆக்குவதற்காகவே, சுத்த டப்பாவான தமிழ் படங்களை ஏன் பார்க்கவேண்டும்? சமீபத்தில் 'ஆதவன்' படம் பார்த்தேன். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த படத்தை புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அந்த படத்தின் தயாரிப்பளரான உதயநிதி ஸ்டாலினை நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி அளவுக்கு புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.இந்த சிறிய வயதிலேயே,தன் சொந்தப் பணத்தை (?) வைத்து தாயாரிப்பளாராக உயர்ந்து வந்தது, மிகவும் ஆச்சரியமான விஷயமே! சூர்யாவைத்தவிர வேறு யாருமே இந்த வேடத்தில் நடிக்கமுடியாதெனவும் கதை விட்டிருந்தார்கள். இப்படி ஒருபடத்தை ரவிகுமார் தவிர வேறு எந்த இயக்குனராலும் இந்த நூற்றாண்டில் இயக்கியிருக்கமுடியுமா என திரைப்பட பிரபலங்களே ஆச்சரியப்பட்டு பேட்டி கொடுத்திருந்தார்கள்.
இவ்வளவு பீடிகையோடு இந்தப்படத்தை பார்க்கப்போனால்...............!
15 நிமிடத்தில் நான் வெளியே வந்துவிட்டேன்.
தயவுசெய்து தொலைக்காட்சி, பத்திரிகைகள் விடும் கதைகளை நம்பி பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்யவேண்டாம்!
டொமினிக் சவுதி
dompower@gmail.com