திங்கள், 23 நவம்பர், 2009

அஜ்மல் கசாப்பும் கசாப்புக்கடையும்!


டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா உள்ளிட்டோர் இன்று சோனியா காந்தியை சந்தித்து கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது உயிரை துச்சமென மதித்து தீவிரவாதிகளுடன் சண்டை போடுவதற்காக விரைந்த ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகள் அநியாயமாக தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானார்கள்.

இந்த துயரச் சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் ஒரு வருடமாகப் போகிறது. இந்த நிலையில், கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கரின் மனைவி ஸ்மிதா சலேஸ்கர் ஆகியோர் இன்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.

தங்களது கணவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் சோனியாவிடம் முறையிட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கவிதா கர்கரே பேசுகையில், நாங்கள் அவரிடமிருந்து சில உறுதிமொழிகளைப் பெற்றுள்ளோம். எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். சந்திப்பு முழுவதும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளின் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவருடன் விவாதித்தோம்.

நாங்கள் அவரிடம் பேசிய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. எங்களுக்கு பெரிய அளவில் எந்த வருத்தமும், புகாரும் இல்லை என்றார்.

இருப்பினும் இந்த சந்திப்பின்போது சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தண்டிக்காமல் வைத்திருப்பது குறித்து கவிதாவும், ஸ்மிதாவும், சோனியாவிடம் அதிருப்தியைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் இருவரும் கோபத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, தரக்குறைவான புல்லட் புரூப் உடைகள்தான் தங்களது கணவர்களின் உயிரைப் பறித்ததாகவும் அவர்கள் வேதனைப்பட்டுக் கூறியதாகவும் தெரிகிறது.

இது இன்றைய செய்தி:
எனது நெஞ்சம் என்ன சொல்லுதுன்னா.................


கசாப்பைத்தூக்கில்லிடாமல் இழுத்தடிப்பதற்கு, சில அரசியல் பாதுகாப்பு கொள்கைகள் காரணமாக இருக்கலாம். ஒருவேளை, இருக்கிற ஒரே ஒரு ஆதாரத்தையும் இந்தியா இழக்க விரும்பவில்லையோ? சமீபத்தில் நான் HBO தயாரித்த 'Terror In Mumbai' பார்க்கநேரிட்டது. அந்த படத்தைபார்க்கிற எவரும் கசாப் போன்ற தீவிரவாதிகளை உடனே துண்டு துண்டாக வெட்டணும் என்றுதான் சொல்லுவார்கள். இதே சம்பவம் சவுதியில் நடந்திருந்தால், bulletproof பேரத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளையும் சேர்த்தே அப்பொழுதே தூக்கிலிட்டிருப்பார்கள்.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

சூரியன் தேடிய வேட்டைக்காரன்!

நேற்று (22 -11-2009 sunday) சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த பொழுது, தற்செயலாக சூரியன் தொலைக்காட்சியை பார்க்கவேண்டியதாகிவிட்டது. AVM மின், விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்திற்கான இசை வெளியீடுதான் அந்த நிகழ்ச்சி. இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்களே என்று பார்த்தால், அதற்கு காரணம்... இது ஒரு சூரியன் தயாரிப்பு. பல சமகாலத்து திரைப்பட ஜாம்பவான்கள் நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த்தார்கள். உண்மையிலேயே விஜய் என்னதான் சாதித்துவிட்டால் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன். திரையில் தோன்றிய ஆரம்ப நாட்களில் இருந்து இன்றுவரை நிறைய மசாலா படங்களை தந்திருக்கிறார். இதுதான் அவர் தமிழ் மக்களுக்காக செய்த பெரும் சேவை. திரைப்படங்களில் சம்பாதித்த ஏராளமான வருமானத்தில் பெரும் சொத்து சேர்த்திருக்கிறார். இப்போது அரசியலிலும் நுழையவேண்டும் என்று ஒரு நப்பாசை. அவரது ஆசை நிறைவேற வேட்டைக்காரன் துணையாக இருப்பானாக!

சனி, 21 நவம்பர், 2009

ஆதவனைப்பார்க்கப்போனது என் போதாதகாலம்!

தற்போதைய தமிழ் படம் பார்ப்பவர்களை நினைத்து நான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
உலகமே முன்னுக்கு போய்கொண்டிருக்கும்பொழுது, நாம் மட்டும் நடிகர் நடிகையரை பணக்காரர்கள் ஆக்குவதற்காகவே, சுத்த டப்பாவான தமிழ் படங்களை ஏன் பார்க்கவேண்டும்? சமீபத்தில் 'ஆதவன்' படம் பார்த்தேன். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த படத்தை புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அந்த படத்தின் தயாரிப்பளரான உதயநிதி ஸ்டாலினை நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி அளவுக்கு புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.இந்த சிறிய வயதிலேயே,தன் சொந்தப் பணத்தை (?) வைத்து தாயாரிப்பளாராக உயர்ந்து வந்தது, மிகவும் ஆச்சரியமான விஷயமே! சூர்யாவைத்தவிர வேறு யாருமே இந்த வேடத்தில் நடிக்கமுடியாதெனவும் கதை விட்டிருந்தார்கள். இப்படி ஒருபடத்தை ரவிகுமார் தவிர வேறு எந்த இயக்குனராலும் இந்த நூற்றாண்டில் இயக்கியிருக்கமுடியுமா என திரைப்பட பிரபலங்களே ஆச்சரியப்பட்டு பேட்டி கொடுத்திருந்தார்கள்.
இவ்வளவு பீடிகையோடு இந்தப்படத்தை பார்க்கப்போனால்...............!
15 நிமிடத்தில் நான் வெளியே வந்துவிட்டேன்.
தயவுசெய்து தொலைக்காட்சி, பத்திரிகைகள் விடும் கதைகளை நம்பி பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்யவேண்டாம்!
டொமினிக் சவுதி
dompower@gmail.com